Thursday, March 5, 2020

CORONA VIRUS UPDATES

சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியி ருக்கிறது. ஏற்கனவே 50 நாடுகளை தொட்டிருக்கும் கொரோனா தொற்று கண்டு உலக மக்கள் அனைவரும் பீதிக்குள்ளாகியி ருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைந்து திரும்பிய நிலையில் தற்போது மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டறிவதில் முழுமையடையாத நிலையில் மறுபக்கம் இதை கட்டுப்படுத்துவதில் அரசும், சுகாதாரத்துறையும் திணறிவருகிறது.

கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது. இந்த தொற்றுக்கு இதுவரை 3311 பேர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Featured

Best Coaching center for Nurses in Chennai

Best Coaching Center for Nurses in Chennai – Complete Guide for 2026 Are you searching for the  best coaching center for nurses in Chennai  ...